திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் நேற்று இரவு திருச்சி கேம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் இருட்டில் அமர்ந்து கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ரமேஷ்குமார், உடனடியாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருட்டில் அமர்ந்திருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் சுனில் (வயது 21), நித்தின் (22), ஆல்பின் ( 21), பிரகாஷ் ( 23), ஹாய் என்பதும், கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அாிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed, but trackbacks and pingbacks are open.