Rock Fort Times
Online News

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 47 அரியவகை பாம்புகள் பறிமுதல்…!

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூ ரு உள்பட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல அங்கிருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று இன்று காலை திருச்சி வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என்ற பயணி கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அதில் 47 அரியவகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து பாம்புகள் மற்றும் பல்லிகளை பார்வையிட்டனர். அவற்றை எதற்காக விமானத்தில் கடத்தி வந்தார் என்பது குறித்து முகமது மொய்தீனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல, சமீபத்தில் மலேசியாவில் இருந்து நட்சத்திர ஆமைகளை பயணி ஒருவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அந்த நட்சத்திர ஆமைகள் மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்