Rock Fort Times
Online News

திருச்சியில் ரூ.34.65 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம்  திறப்பு..

ஸ்ரீரங்கம் சட்டமன்ற  உறுப்பினர் பழனியாண்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று ( 08.06.2023 ) திறந்து வைத்தார். மேலும்  திருச்சி மாவட்டம் மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 4.0 தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குத்து விளக்கு ஏற்றி தொழிற் பயிற்சி மையத்தினை பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ, நிலைய மேலாண்மை குழு தலைவர் சுகுமார் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்