திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அந்தப் பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, திருச்சி அரசு மருத்துவமனை கேண்டீன் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி, அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.