நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி இன்று ( 27.05.2023 ) காலை தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. திருவாசி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை கண்டதும் பஸ் டிரைவரும், கண்டக்டரும் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் சாலையில் பஸ் கவிழ்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Comments are closed, but trackbacks and pingbacks are open.