Rock Fort Times
Online News

பெங்களூருவில் இருந்து ஓட்டு போட வந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளி மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இருந்து தருமபுரி நோக்கி ஒரு காரில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். சாணமாவு என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்