Rock Fort Times
Online News

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போனை பறித்த 3 பேர் கைது…! 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மலர் (40).   இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம்  பஸ் நிலையம் வந்து இறங்கினார்.  பின்னர், தனது செல்போனில் உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது 3 பேர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி  விட்டனர்.  இதுகுறித்து  கோட்டை போலீசில்  மலர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் மொபைலை பறித்துச் சென்ற மதுரை மேலூர் சொக்கம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த பெரிய மருது (28) சக்திவேல் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து    ஆண்ட்ராய்டு மொபைல் போன் மீட்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்