திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்து அவரை சோதனை செய்ததில் அவரது உள்ளடைக்குள் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 292 கிராம் எடை கொண்ட 16 லட்சம் ரூபா் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.