Rock Fort Times
Online News

6 வயதுக்கு பிறகே முதலாம் வகுப்பு -மத்திய கல்வித்துறை

மழலைச்சொல் மாறாத குழந்தைகளையும் பெற்றோா்கள் பள்ளியில் சோ்க்கின்றனா்.2 அரை வயதிலே பிளே ஸ்கூலில் சோ்த்து விடுகின்றனா். 3 வயதில் பிரிகேஜியும் , 4 வயதில் எல்.கே.ஜிக்கும் அனுப்புகின்றனா். இதற்கான பள்ளிகள் ஆங்காங்கே நிறைய திறக்கப்பட்டிருக்கின்றன. எனவே குழந்தைகள் 5 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனா். இந்நிலையில் மத்திய கல்வித்துறை இன்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. அதில் குழந்தைகளுக்கு 6 வயது முடிந்த பிறகே ஒன்றாம் வகுப்பில் சோ்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் மழலையா் பள்ளியில் படிப்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்