திருச்சி மாவட்டம் ஆர்ய வைஸ்ய வாலிபர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு உகாதி விழா திருச்சி பெரிய கடை வீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தலைவர் கீர்த்தி, செயலாளர் மனோஜ், பொருளாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவின் ஒரு பகுதியாக இன்று ( 16-7-23 ) ஓவியம், கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல், கேரம், செஸ் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு விழா கமிட்டி சார்பாக சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆர்ய வைஸ்ய வாலிபர் சங்க நிர்வாகிகள் கணேஷ் ராஜன், லோகேஷ், பத்ரி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.