தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் எஸ்பியாக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐஜியாக பிரமோத் குமாரை தமிழக அரசு நியமித்துள்ளது. கல்பனா நாயக் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக ஐபிஎஸ் அதிகாரி அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.