Rock Fort Times
Online News

உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! – செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(26-09-2024) தீர்ப்பளித்தது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  எக்ஸ் தளபதிவில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.  அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.  கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.  உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்