தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுகடை வைக்க விண்ணப்பிக்கலாம் ! திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் அடுத்த மாதம் 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ- சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிக்கான ஆதாரம், கடை வைக்கப்படும்முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், உரிமக்கட்டணம் ரூ.500-ஐ இ- சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்து சீட்டு அசல், சொந்தகட்டிடம் எனில் பட்டா நகல், வாடகை கட் டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் (பட்டாசுக்கடை நடத்த சம்மதம் என குறிப்பிட்டிருக்க வேண்டும்), குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட இடத்துக்கான வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். சுயஉறுதிமொழிப்பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட திட்ட அனுமதி. மேற்கண்ட விண்ணப்பங்களை அடுத்தமாதம் 24-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும். உரிமக்கட்டணம் ரூ.500-ஐஅரசுக்கணக்கு தலைப்பில் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பிக்கலாம் மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி/ உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.
Comments are closed.