திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் முத்தாதாள்(71). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளார். முன்பணமாக 8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதமுள்ள 8 லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு அலுவலகத்தில் செலுத்தி அந்த வீட்டை பதிவு செய்வதற்காக சென்றபோது, ஏற்கனவே அந்த வீட்டின் மீது வங்கியில் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. வங்கியில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று அந்த வட்டியுடன் சேர்த்து 9 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே முத்தாதாள் தனக்கு வீடு வேண்டாம் என்று கூறி முருகானந்தத்திடம் அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆறு வருட காலமாக அட்வான்ஸ் பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக முத்தாதாள், பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் புகார் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ( 25.09.2023 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்தாதாள், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் முத்தாதாளிடம் மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.