திருச்சி மாணவர் கொலை : இறுதி ஊர்வலத்தில் ரகளை செய்த 2 பேர் கைது …
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை..
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா கொடியாலம் மேலத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல மாணவர் கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் கதவுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்து படுகொலை செய்தனர். இந்த கொலை குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்தனா். இந்நிலையில் கோகுலின் இறுதி ஊா்வலத்தின் போது ஜீயபுரம் கடை வீதியில் இளைஞா்கள் சிலா் ரகளையில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்போில் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவா்களை எச்சாிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் மாணவரின் இறுதி ஊர்வலத்தில் ரகளை செய்தவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இறுதி ஊர்வலத்தின் போது இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதன் காரணமாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீ.வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவின்பேரில், ஜீயபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு இறுதி ஊர்வலத்தில் ரகளை செய்ததாக திருவெறும்பூர் ,சர்க்கார் பாளையம், மாதா கோவில் தெருவை சோ்ந்த ஆனந்தராஜ் மகன் ராஜ் கிறிஸ்டோபா் (19), அதே பகுதியை சோ்ந்த ஜேம்ஸ் மகன் விக்கி (19) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.