இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று(21-01-2025) திடீரென முகாம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை, கழிவறை இல்லை, கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லை, சுத்தமான குடிநீர் இல்லை எனக்கூறி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் முகாமிற்கு திரும்பினர்.
Comments are closed.