திருச்சி, புதிய காவிரி பாலம்- 12 மாதங்களில் பணிகளை முடிக்க ஏற்பாடு ! நெடுஞ்சாலைத்துறையினர் பிரத்தியேக தகவல்!
திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி பாலம் இருந்து வருகிறது. 1976-இல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பாதுகாப்பு நலன் கருதி காவிரியின் குறுக்கே ரூ.106 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால், டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரியில் தண்ணீர் செல்லும் பகுதியில் பாலப்பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம்தான் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் தருணத்தை பயன்படுத்தி காவிரி ஆற்றுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில்., கடந்த சில நாள்களாக காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டம் திருப்பி விடப்பட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன. 2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இலக்கு நிர்ணயித்து பணிகள் நடைபெறுகின்றன என்றனர்.
Comments are closed.