திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக( எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்த குணா இன்று( ஆகஸ்ட் 14) பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி பேரணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பணியின்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.