அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கும் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்- பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (பிப்.26) புதன்கிழமை காலை 9 மணியளவில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையிலும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையிலும் நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன். கூட்டத்தில் தமிழக முதல்வர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments are closed.