Rock Fort Times
Online News

திருச்சி, காந்தி மார்க்கெட் வந்த அரசு ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் சிக்கினர்…!

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் பிப்ரவரி 15ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தார். பின்னர், காந்தி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை இரண்டு பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் கிராப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (40), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிகுமார் (34) என்பதும், இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சேகரிடம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார்,
பழனிகுமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்