கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று ( 24.08.2023 ) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இதில், திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியும் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தேன், அதில், முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்தது. அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் புதிய படம் வரும். மியூசிக் அகாடமி தொடங்கும் திட்டமும் இருக்கிறது என்று தெரிவித்தார். தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும் அதற்கு மாற்று வழி இல்லை என பதிலளித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.