Rock Fort Times
Online News

கையில் பட்டாக்கத்தியுடன் நாட்டு வெடிகுண்டு வீசி “தல” நான் தான் என கெத்து காட்டிய வாலிபர் கைது…!(வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர்  மன்னாரு என்ற மணிகண்டன் (வயது 21). இவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இந்தநிலையில் மணிகண்டன் ஒரு கையில் பளபளக்கும் பட்டாகத்தியுடன்,  நாட்டு வெடிகுண்டை வீசி நான் தான் “தல” என வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.  இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த சூழலில் மணிகண்டன் பெட்டவாய்த்தலை  கடைவீதியில் பட்டாகத்தியுடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்