2023ம் ஆண்டின் இரண்டாவது சட்டசபை கூட்டம் நாளை (9-10-2023) காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்திருந்தார். அப்போது, 2023-2024ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. முதல் நாளிலேயே காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.