Rock Fort Times
Online News

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு பறந்து வந்த கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் செக் வைத்த சுங்கத்துறையினர்

திருச்சி விமான நிலையத்தில் அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வந்த ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 1199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து வந்த பாடிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமான பயணிகளை சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்த போது 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ஆயிரத்து 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்