திருவெறுப்பூரிலிருந்து திருவேங்கடநகர் வரை செல்லும் சாலை கடந்த ஐந்து வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது இதனால் இச்சாலையை பயணிப்போர் விபத்தில் சிக்கும் அபாயமான சூழ்நிலை இருந்து வந்தது இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவே சாலையை புதுப்பித்து தரக்கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக சாலையில் நாற்று நடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் இச்சாலையில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்பட்டு கை கால் முறிவு ஏற்படுவதை தெரிவிக்கும் வகையில் கைகளில் கட்டு போட்டு போராட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூரை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்
Comments are closed.