அரியலூர் மாவட்டம் ஒத்த கோவில் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கீழ தேவ தானம் குருசாமி நகரில் தங்கி திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னலில் கயிற்றில் தூக்கு மாட்டி பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.