Rock Fort Times
Online News

பழனி முருகன் கோவிலில் 15 முதல் 23 -ம் தேதி வரை தங்கரத புறப்பாடு ரத்து…!

கோவில் நிர்வாகம் அறிவிப்பு...

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.
இக்கோவிலில் சுவாமியின் தங்கரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
ஆனால், 15 முதல் 23- ம் தேதி வரை தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்