Rock Fort Times
Online News

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்…!

78-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.  இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின்,  பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி,  தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும்,  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை திமுகவின் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளன.  கடந்தாண்டு நடைபெற்ற தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்த நிலையில், இந்தாண்டு திமுக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்