‘தமிழ்நாடு நாள்’ ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் ‘தமிழ்நாடு நாள்’ எனும் வடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர். பின்னர் மக்கள் தொடர்பு துறையால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் ஜூலை 18 அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் திறந்து வைக்க மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.