Rock Fort Times
Online News

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை கண்டிப்பு…!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன.  தேர்வு முடிந்ததும் வருகிற 28-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 2ம் தேதி( புதன்கிழமை) வரை ஐந்து நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பின்னர் வருகிற 3-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்தநிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின்  கோரிக்கைக்கு இணங்க காலாண்டு விடுமுறை ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  அதன்படி விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.  காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்