Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று 19ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருச்சியிலிருந்து சென்னைக்கு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இன்று(19-01-2025) 96 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் போக்குவரத்து கழகம் மூலம் 300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நான்கு நாட்களில் மட்டும் 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளை நம்பி மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதை தான் இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. அதேபோல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்காக மொத்தம் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு முந்தைய நாள் ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து விட்டது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்