Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு A++ அங்கீகாரம்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு A++ அங்கீகாராம் கிடைத்துள்ளது. இது  குறித்து செய்தியாளா்களை சந்தித்த கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஏ.கே.காஜா  நஜீமுதீன் கூறுகையில்…

ஜமால் முகமது கல்லூரி, தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் நான்காவது சுழற்சியின் போது மொத்த மதிப்பு 4.0-க்கு 3.69 உயர் தரத்துடன் கூடிய A ++ மதிப்பெண் பெற்றுள்ளது. இம்மதிப்பீடு கல்லூரியின் பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், விரிவாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள், மாணவர்கள் ஆதரவு மற்றும் முன்னேற்றம், நிர்வாகம், தலைமைத்துவம், மேலாணமை மற்றும் நிறுவன மதிப்புகள் முதலிய அம்சங்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.கல்லூரிக்கான ஆய்வு தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட குழுவின் மூலம் செப்டம்பர் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற்றது. இக்குழு கல்லூரியில் உள்ள அனைத்து துறை மற்றும் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு துறைகளின் சிறப்பம்சங்களை அறிந்து கொண்டனர். மேலும், மாணவ- மாணவிகளிடமும் அவர்களது பெற்றோர்களோடும் , முன்னாள் மாணவர்களோடும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களோடும் கலந்துரையாடி கல்லூரியின் பன்முகத்தன்மையைப் பற்றி தெரிந்து கொண்டனர். இக்குழு ஆய்விற்கு கல்லூரியின் உள்தரகட்டமைப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதன் அடிப்படையில் தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பால் ஜமால் முகமது கல்லூரிக்கு “A++” உயர்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் போது பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலர் முனைவர் கே. அப்துஸ் சமது, கௌரவ இயக்குநர் முனைவர். கே.என்.அப்துல் காதர் நிகால் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் எம். இஸ்மாயில் முகைதீன்  உடன் இருந்தனா். 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்