Rock Fort Times
Online News

திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சார்பில் கருத்தரங்கம்…!

திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சார்பில் திருச்சியில் இன்று (03-03-2024) கருத்தரங்கம் நடைபெற்றது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்று பேசினார். மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் லட்சுமணன், ராஜேந்திரன், ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சுப.சோமு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில், நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க பாடுபடுவது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய உழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கில் விக்னேஸ்வரன், சுந்தரவடிவேல், பொதுச் செயலாளர் கிருபா, சுகன்யா , சிவகாமி , மோகனாம்பாள், வனஜா ,விஜயா பாபு மற்றும் தஞ்சாவூர், புதுக்கோட்டை ,கரூர், பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்