Rock Fort Times
Online News

திருச்சியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி…

திருச்சி பாரதி நகரை சேர்ந்தவர் முகமது ஆதில் (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் முகமது ஆதில்
கே.சாத்தனூர் பகுதியில் உள்ள குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது முகமது ஆதில் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரை நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவரது உயிர் பிரிந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ஆதில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்