Rock Fort Times
Online News

கள்ளச்சாராயம் விற்பனை: திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. அமைப்புச்செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன், வெங்கட்பிரபு, ஜான் எட்வர்ட், சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் வக்கீல் முத்துமாரி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முல்லை சுரேஷ், நிர்வாகிகள் பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், மகளிர் அணி நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, புவனேஸ்வரி, சபீனாபேகம், வட்ட செயலாளர் கே.சி.பி ஆனந்த், ஐடி பிரிவு நிர்வாகிகள் கதிரவன், நாகராஜன், புத்தூர் ரமேஷ், சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை கண்டித்தும்,
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் 24-ந் தேதி( திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
இதில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்