Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் துபையிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் பயணி ஒருவர்   நிக்கல் முலாம் பூசப்பட்ட தங்க ஆணிகளை பெட்டியின் பக்கவாட்டு சட்டங்களில் பொருத்தி கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 239 கிராம் எடையுள்ள அவற்றின் மதிப்பு ரூ.14.38 லட்சமாகும். அவற்றை சுங்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்