ஸ்ரீரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 63). பெல் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், சம்பவத்தன்று கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக இவரது உடலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியது. இதில், உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் ரங்கராஜன் கொடுத்த புகாரின் பேரில் , ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.