Rock Fort Times
Online News

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…!

திருச்சி, பீமநகர் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர்ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், கடந்த சில மாதங்களாக அதிகளவில் மது குடித்து வந்துள்ளார். இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தன் அறைக்கு உறங்கச்சென்ற வெங்கடேஷ், நேற்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்