Rock Fort Times
Online News

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு வாய்ப்பு: துணைத்தேர்வு தேதி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று ( மே 8) வெளியானது. இந்தத் தேர்வில் கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 25-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. துணைத்தேர்வு எழுத விரும்புவோர் மே 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.தனித்தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாவட்ட வாரியான சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்