தமிழ்நாடு ஜோதி யாத்திரை கமிட்டி தலைவரும், சென்னை மாநகர மாவட்டத் தலைவருமான திரவியம் தலைமையில் ராஜீவ் காந்தியின் ஜோதி கன்னியாகுமரியில் ஆரம்பித்து 3 ம் நாளாக திருச்சி ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ் காந்தி சிலையை வந்தடைந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம்.சரவணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.வி.ரெக்ஸ், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியா அபுதகிர், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜா டேனியல் ராய் கனகராஜ் மற்றும் செந்தில் ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா மாவட்ட தலைவர் முஸ்தபா, ஐ.என்.டி.யு.சி. துணை தலைவர் சம்சுதீன், வார்டு தலைவர்கள் கருமண்டபம் ரவி, வீரமணி, சரவணன், சேகர், சுப்ரமணி, சலீம் பாய், மேலபுதுர் சக்திநாதன், ரமேஷ், பீமநகர் அப்பு, துவாக்குடி ஜெகன் பட்டேல் மன்சூர் மற்றும் சென்னை மோகன் காந்தி, சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.