திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த அண்ணாவி மகன் மதிவாணன் ( வயது 34). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பால் கேன்களை ஏற்றுவதற்காக மதிவாணன் மினி லாரியில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் ஆமூர் என்ற இடத்தில் மினி லாரி வந்து கொண்டிருந்த போது எதிரே முசிறி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் , மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மினி லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் மதிவாணன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார், முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த பஸ் டிரைவர் ராஜா (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான டிரைவர் மதிவாணனுக்கு திருமணமாகி பாலாமணி என்ற மனைவியும் (30), லத்திகா (7), சபரிவாசன்(5) ஆகிய இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.