புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா…
"ஆணாதிக்க சக்திகளால் வீழ்த்தப்பட்டேன்" என கடிதம்...
புதுச்சேரி அரசின் போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்ற செய்திகள் வெளியாகின . அவருக்கு பதிலாக காரைக்கால் மூத்த எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின . இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின . இந்தநிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆணாதிக்க சக்திகளால் வீழ்த்தப்பட்டதாகவும் இன்னும் பல தகவல்களையும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சந்திரா பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா செய்த அமைச்சர் சந்தர பிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை , பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.