திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வையம்பட்டி
கே. புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சேது தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான எம். எஸ்.எம்.ஆனந்தன் எம் எல் ஏ,,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணூத்து பொன்னுசாமி, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில், குமரேசன், எத்திராஜ், ராமச்சந்திரன், மகேந்திரன், ஆறுமுகம் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.