முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து நடத்திய மனநல மருத்துவ முகாம் கண்ட்டோன்மென்ட் கிளையில் நடந்தது. இதில், மனநல ஆலோசகர் நிர்மலா தேவி கலந்துகொண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை கூறினார். முகாமில் போக்குவரத்து கழக கிளை மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.