திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று ( 15.06.2023 ) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.