Rock Fort Times
Online News

திருச்சி தேசிய கல்லூரிக்கு ஏசி பஸ் வழங்கும் நிகழ்ச்சி….

திருச்சி தேசியக் கல்லூரிக்கு ஏசி பஸ் வழங்கும் நிகழ்ச்சி இன்று    ( 30.09.2023 ) கல்லுாாி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கி.குமார் தலைமை தாங்கிப் பேசினார். செயலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார்.  முன்னதாக கல்லூரி துணை முதல்வர் பிரசன்னபாலாஜி அனைவரையும் வரவேற்று பேசினார். எக்ஸெல் குழுமத் தலைவர் இன்ஜினீயா் எம். முருகானந்தம் புதிய ஏசி சொகுசு பஸ்ஸை கல்லூரி செயலாளர் ரகுநாதனிடம் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

வாழ்க்கையில் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். மாணவ-மாணவிகள் சுயமாக சிந்திக்க பெற்றோர்கள் வழிவிட வேண்டும். சக மனிதர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும். சகோதரத்துவம் தழைத்தோங்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார். நிறைவாக கல்லுாாி துணை முதல்வர் பென்னட் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த பஸ் ஆராய்ச்சி படிப்பு மற்றும் விளையாட்டுத் துறை மாணவ மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

                   

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்