Rock Fort Times
Online News

திருச்சி சிறையில் மயங்கி விழுந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு…!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேல பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 71 ).இவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சிறை காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி வீரமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்