2024 -ம் ஆண்டு பொங்கல் திருநாளை ஒட்டி 3,184 போலீசாருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், சிறப்பாக பணியாற்றிய 3,184 போலீசார், சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும்.தீயணைப்புத் துறையில் 119 பேருக்கும், சிறைத்துறையில்59 பேருக்கும் பழக்கங்கள் வழங்கப்படும்.இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.பதக்கம் பெறுவோருக்கு நிலை வேறுபாடு இன்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.