மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று ( 02.10.2023 ) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில், மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் கர்மவீரர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு , அன்னாரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள காமராஜர் சிலை, காந்தி மார்க்கெட் எதிரில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவு ஸ்தூபி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் சேவா தளம் மாவட்ட தலைவர் ஜி.முரளி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஜங்ஷன் கோட்டத் தலைவி பிரியங்கா பட்டேல் ,சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபுதாஹிர், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் அம்ஜத் , செந்தில் ஐ.என்.டி.யு.சி சம்சுதீன்,திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரஃபி, ஈபி ரோடு சண்முகம் ,ராஜீவ் காந்தி நிர்மல் மார்க்கெட் மாரியப்பன், ஜங்ஷன் கோட்டம் பொருளாளர் பெல்ட் சரவணன், வார்டு தலைவர்கள் கண்ணன், விமல், சூர்யா,விஜய் , திம்மை செந்தில் குமார்,சேவா தல நிர்வாகிகள் ஜிம் விக்கி ,அப்சர் அரவிந்த் , சரவணன் , விஜய், ஜெயசூர்யா , சேக் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.