சமயபுரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க அரசாணை…
கதிரவன் எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ச.கண்ணனூர் பேரூராட்சி பொது மக்கள், அரசின் சலுகைகளை பெற தங்கள் பகுதிக்கென கூட்டுறவுக் கடன் சங்கம் வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. எஸ்.கதிரவன் இதற்கான தொடர் முயற்சியினை எடுத்து வந்தார். இதன்பயனாக சமயபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பதற்கான ஆணை அரசிடமிருந்து பெறப்பட்டது. இதற்கான அனுமதி ஆணையை லால்குடி சரக துணைப்பதிவாளர் த.பானுமதி சம்பந்தபட்டவா்களிடம் வழங்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.